அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மர்மமான முறையில் இறந்த ஆணின் சடலம்


மர்மமான முறையில் மன்னார் விடத்தல் தீவு பள்ளமடுப் பகுதியிலுள்ள கடை ஒன்றில் இறந்து கிடந்த ஆண் ஒருவரது சடலத்தை மன்னார் விடத்தல் தீவு பொலிஸார் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நேற்றுவியாழக்கிழமை மாலை கொண்டு வந்துள்ளனர்.


முருகன் அருமைத்துரை (வயது 41) என்பவரது சடலமே இவ்வாறு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேநீர்க் கடை ஒன்றில் புதன் இரவு இறந்து கிடந்த நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதால் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்டுள்ளதாக விடத்தல் தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரது மர்மமான மரணம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சின்னையா சிவரூபன் இன்றுமருத்துவப் பரிசோதனை செய்யவுள்ளார்.
மன்னாரில் மர்மமான முறையில் இறந்த ஆணின் சடலம் Reviewed by Admin on June 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.