அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ஒருவரின் திட்டமிட்ட செயலே மன்னார் சம்பவம்


மன்னார் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் இடம்பெற்ற சம்பவம் அரசாங்கத்திலுள்ள அமைச்சர் ஒருவரின் அழுத்தத்தினால் திட்டமிட்டு நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயலாகும் என நீதிமன்ற நீதவான்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

இதனை மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக காண்பிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த செயலானது நீதிமன்றத்தை அவமதிப்பதாகவும் அழுத்தம் விடுப்பதாகவும் அமைந்துள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவை அரசியமைப்பில் குற்றங்களாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயல்களாகும் எனவும் அந்த சங்கம் தெரிவிக்கின்றது.

இந்த சம்பவம் குறித்து மன்னார் நீதவான் பொலிஸ் நிலையத்தில் முழுமையான வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

சம்பவத்திற்கு பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சர் உள்ளிட்ட குண்டர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு உடனடியாக பொலிஸ் மாஅதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கம் தெரிவிக்கின்றது.

அமைச்சர் ஒருவரின் திட்டமிட்ட செயலே மன்னார் சம்பவம் Reviewed by NEWMANNAR on July 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.