அண்மைய செய்திகள்

recent
-

நிரந்தரமான மருத்துவர் இல்லாததால் நோயாளிகள்அவலம்

மன்னார் அடம்பன் வைத்தியசாலையில் நிரந்தரமான மருத்துவர் இல்லாததால் நோயாளிகள் அவலங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

இந்த வைத்தியசாலை பல மைல்சுற்றாடலில் உள்ள மக்களின்  மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது..ஆனால் நிரந்தர வைத்தியர் இன்மையால் இச் செயற்பாடுகள் உரிய முறையில் அமைந்திருக்க வில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் பல மைல் தூரத்தில் இருந்து வரும் நோயாளிகள் பதில் மருத்துவர் இல்லாத வேளையில் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிகின்றது..அடம்பன் வைத்தியசாலையில் விடுதி வசதிகளும் உள்ளன.நிரந்தர வைத்தியர் ஒருவர் நியமிக்கப்படுவாராயின்.ஓரளவு சிறந்த வைத்திய  வசதியை மக்களுக்கு வழங்ககூடியதாக கூடியதாக இருக்கும்.

மற்றும்  தூர இடங்களில் இருந்து வரும் நோயாளிகள் மறு நாளே மன்னார் வைத்தியசாலை செல்ல முடிகின்றது..இதனால் நோயாலும் அவதி உறுகின்றனர்.எனவே இந்தப் பகுதி மக்களின் அவல நிலையை கருத்தில் கொண்டு.அடம்பன் வைத்தியசாலைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக மான்னார் இணையம் வேண்டுகோள் விடுக்கின்றது..

உரிய அதிகாரிகளே இது உங்கள் கவனத்திற்கு..,,,,,,
நிரந்தரமான மருத்துவர் இல்லாததால் நோயாளிகள்அவலம் Reviewed by Admin on July 06, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.