அண்மைய செய்திகள்

recent
-

கடும் வரட்சி காரணமாக மன்னாரில் சிறு போக நெற் செய்கை அழிவடையும் நிலை

கடும் வரட்சி காரணமாக மன்னாரில் சிறு போக நெற் செய்கை அழிவடையும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.முருங்கன் கட்டுக்கரை குளத்தை நம்பியே இம்முறை பல ஏக்கர் நிலப் பரப்பில் விவசாயம் செய்கை பண்ணப்பட்டது.

ஆனால் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக நீர் நிலைகள் வற்றியதால் நீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.குளங்கள்,நன்னீர் கிணறுகள் என்பனவும் வற்றிய நிலையில் காணப்படுகின்றன.
இதனால் விவசாய பயிர்களுக்கு தேவையான நிலை பெற முடியாத நிலை ஏற்படுகின்றது.போதிய நீர் இல்லாததால் பயிர்கள்  கருகிய நிலையில் காணப்படுகின்றன.


 இன்னும் சில வாரங்கள் இதே போன்று காணப்பட்டால் நெற்பயிர்கள் முழுவதும் கருகி விடும் என விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

பல இடங்களிலும்  கடன்களை பெற்று விவசாயம்  விவசாயிகள் இதனால் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் கவலையும்,குழப்பமாகவும் உள்ளனர்.
கடும் வரட்சி காரணமாக மன்னாரில் சிறு போக நெற் செய்கை அழிவடையும் நிலை Reviewed by Admin on July 10, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.