சிறப்பாக நடைபெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த பெருநாள்
நானாட்டான் புனித ஆரோக்கிய மாதா தேவாலய வருடாந்த பெருநாள் இன்று (10.07.2012) வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 6 மணியளவில் செபமாலையைத்தொடர்ந்து காலை 07.15 மணியளவில் நானாட்டான் பங்குத்தந்தை அருட்திரு.இ.அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் தலைமையில் திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியைத் தொடர்ந்து அன்னையின் திருச்சொரூபம் நானாட்டான் பாடசாலை வீதிவழியே பயணித்து மீளவும் ஆலயத்தை வந்தடைந்தது. இந் நிகழ்வில் பங்கு மக்களும் அயல் கிராம மக்களும் பெருமளவில் கலந்து கொண்டதுடன் நானாட்டான் மகா வித்தியாலய மாணவர்களும் பக்தி சிரத்தையுடன் வழிபாடுகளில் ஈடுபட்டு அன்னையின் அருள்பெற்றேகினர்.
-வி ஆர்.
சிறப்பாக நடைபெற்ற நானாட்டான் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த பெருநாள்
Reviewed by NEWMANNAR
on
July 10, 2012
Rating:

No comments:
Post a Comment