நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை மீறியுள்ளாரா? ஆராயுமாறு சபாநாயகர் உத்தரவு
நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை கேள்விக்குட்படுத்த எவருக்கும் அதிகாரமில்லை எனவும் அவ்வாறு கேள்வி எழுப்பினால் அது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறலாகும் எனவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று கூறினார்.
மன்னார் நீதிமன்றத்தில் தான் வழக்குரைஞராக ஆஜரானபோது மன்னர் நீதவான் தன்னை எச்சரித்ததாக வன்னி மாவட்ட ஐ.ம.சு.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் தெரிவித்த முறைப்பாட்டையொன்றையடுத்தே சபாநாயகர் இவ்வாறு கூறினார்
'வழக்கத்திற்கு மாறாக, என்னை தனது அறைக்கு அழைத்த நீதவான், மன்னார் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்குபற்றினேனா எனவும் தனக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நான் கருத்து தெரிவித்தேனா எனவும் கேள்வி எழுப்பினார்' என நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் கூறினார்.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற சிறப்புரிமைக்கு உரியவர்களானாலும் நீதித்துறை அலுவலர் ஒருவரின் நடவடிக்கையை நாடாளுமன்ற உறுப்பனிர் விமர்சிக்க முடியாது என்பதால், மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் முன்னர் ஆற்றிய உரையானது நிலையியற் கட்டளையை மீறுகிறதா என்பதையும் சபாநாயகர் ஆராய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். அதன்பின் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ மேற்கண்ட தீர்ப்பை அளித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிறப்புரிமையை மீறியுள்ளாரா? ஆராயுமாறு சபாநாயகர் உத்தரவு
Reviewed by NEWMANNAR
on
August 08, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment