அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து முதல்முதலாக வெளிவரும் ஆன்மீக மாத சஞ்சிகை -‘பக்திவிஜயம்’

வாசிப்பிலும்,சமயப்பற்றிலும் நம் தற்கால சந்ததியினர் பிடிப்பில்லாமல் இருப்பதை காண்கிறோம் அல்லவா, எதிர்காலத்தில் இந்த இரண்டு அற்புத துறைகளையும் மென்மேலும் புறக்கணிப்பார்களோ என்ற கவலையும் எழுகிறது.
எல்லாவற்றையும் இழந்ததுபோல ஆன்மபலமும், சமய ஞானமும்கூட நமக்கு உரிமையற்றுப் போக இடமளித்தல் தகாது.
       இந்திய படைப்புகளிலும், வெளியீடுகளிலும் கிடைக்கின்ற வாசிப்பு சுகத்தையும், பக்தியையும் நாமும் அனுபவிக்க இன்னும் எத்தனை காலம்தான் காத்திருப்பது! எம்மாலும் அப்படி தரவும்,பெறவும் முடியாதா?
நிச்சயமாக முடியும், என்று நம்புகிறோம்....
     கடந்த ஐந்து மாதங்களாக எமது கடும் உழைப்பால் வெளியிடப்பட்டு வருகின்ற ஆன்மீக மாத சஞ்சிகையின் பெயர், ‘பக்திவிஜயம்..’ஆகும். எந்த வகையிலும் தமிழக வெளியீடுகளுக்கு குறையாத அளவுக்கு தரமுள்ள இதழாக வந்துகொண்டிருக்கிறது. இதனை வாசித்து பரவசமும், பக்தியுமாக எம்மை நாளாந்தம் சமயப்பற்றாளர்கள் ஊக்கப்படுத்ததி வருகிறார்கள்.
      நமது சமயத்தின் அற்புதமான புராணங்களையும், ஆன்மீகச்செல்வங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் இந்த சஞ்சிகை சுவைபட தருகிறது. குடும்பத்தோடு வாசித்து பக்தி மயமான நடைமுறைகளை பின்பற்றவும், சமய இன்பம் பெறவும் இது துணைநிற்கிறது.

     அன்பான நெஞ்சங்களே, இந்த பக்திச் சஞ்சிகையை தொடர்ந்து வெளியிட்டு, சமயப்பணி புரிய உழைக்கும் எம்மை ஆதரித்து, தாங்களும் உதவிக்கரம் நீட்டினால் மிகுந்த நன்றி உடையவர்களாக இருப்போம்.

   ஏனெனில், இது தங்களைப்போன்றவர்களின் ஆதரவின்றி செய்ய முடியாத ஒரு கடினமான முயற்சி என்பதை தாங்கள் நிச்சயம் அறிவீர்கள்!

  நன்றி.
 இப்படிக்கு 
தங்களின் அன்பான இதழாசிரியர்,
எஸ்.பி.முத்து.
முகவரி,
555, புதுத்தெரு,
மன்னார்,
இலங்கை.
தொ.பேசி, 0713861168, 0232250071, 0776649635





மன்னாரில் இருந்து முதல்முதலாக வெளிவரும் ஆன்மீக மாத சஞ்சிகை -‘பக்திவிஜயம்’ Reviewed by NEWMANNAR on August 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.