அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டம் குறைவு.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீரும் தற்போது வற்றி வருகின்றது.

இதனால் மன்னார் மாவட்டத்தில் குடி நீருக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச்சபையினூடாக மன்னார் மாவட்டத்தின் பல பாகங்களுக்கு குடி நீர் திட்டம் வழங்கப்பட்டுள்ளது.


கட்டுக்கரை குளத்தில் இருந்து குடிப்பதற்கும்,அப்பிரதேசத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காகவும் நீர் வினியோகிக்கப்பட்டு வந்தது.


இந்த நிலையில் தற்போது கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதிகளில் கட்டுக்கரை குளத்தை நம்பி மேற்கொள்ளப்பட்டு வந்த நெற்பயிர்ச்செய்கையும் பாதீப்படைந்துள்ளது.


தற்போது கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டம் மிகவும் குறைந்த நிலையில் காணப்படுகின்றது.


இதனால் நெற்பயிர்ச்செய்கை பாதீக்கப்பட்டுள்ளதோடு மக்களுக்கு குடிப்பதற்காக வினியோகிப்பதற்கு தற்போது நீர் மட்டம் காணத நிலையில் உள்ளது.


அத்தோடு குறித்த கட்டுக்கரை குளத்தில் அப்பகுதியில் உள்ள பலர் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தனர்.தற்போது அவர்களுடைய தொழிலும் பாதீக்கப்பட்டுள்து.


மன்னார் மாவட்டத்தில் மழை பெய்யாத நிலை தொடர்ந்தும் காணப்பட்டால் மன்னார் மாவட்டத்தில் குடி நீருக்கு பாறிய தட்டுப்பாடு ஏற்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் நகர நிருபர்
மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டம் குறைவு. Reviewed by NEWMANNAR on August 13, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.