அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதான பாலத்தில் பேருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்து!

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று புதன் கிழமை காலை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வட்டக்கண்டல் கிராமத்தை நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று காலை 7.30 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் முன் சில்லுகள் இரண்டும் ஒன்றாக களன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை 7.30 மணியளவில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து பயணிகளுடன் வட்டக்கண்டல் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது மன்னார் பிரதான பாலத்தில் இருந்து சுமார் நூறு மீற்றர் தொலைவில் குறித்த பேரூந்தின் முன் சில்லுகள் இரண்டும் ஒன்றாக களண்ட நிலையில் பேரூந்து கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகாமையில் கடலுக்குள் பாய்ந்துள்ளது.
தாழ்வு குறைந்த பகுதியில் குறித்த பேரூந்து பாய்ந்ததனால் பயணிகளுக்கு சேதங்கள் ஏற்படவில்லை.எனினும் குறித்த பேரூந்தில் பயணித்தவர்களில் ஒருவர் காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரனைகளை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார் பிரதான பாலத்தில் பேருந்து கடலுக்குள் பாய்ந்து விபத்து! Reviewed by NEWMANNAR on August 01, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.