அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதினால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
மன்னாரில் தற்போது இரவு, பகல் பாராது மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதினால் நோன்பு கடமைகளில் ஈடுபடும் முஸ்ஸிம் மக்களும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆராம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்கு தம்மை தயார் படுத்தும் மாணவர்களும் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக எவ்வித அறிவித்தல்களும் இன்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் மின்பாவனையாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
திடீர்,திடீர் என மின் தடங்கள் ஏற்படுவதினால் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மின் பாவனையாளர்களது பல இலட்சம் ரூபாய் பெருமதியான மின் சாதனப்பொருட்கள் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் மின்சார சபை அதியுயர் மின் கோபுரங்களில் திருத்த வேலைகளை மேற்கொண்டு மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் மன்னார் மின்சார சபை அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,
மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் உள்ள அதியுயர் மின் கோபுரங்களிலேயே தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்ய மின்சார சபை துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதினால் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
August 01, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment