அண்மைய செய்திகள்

recent
-

பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உடன் நஸ்டஈட்டை வழங்க வேண்டும்-செல்வம் எம்.பி


அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஏற்றுமதி விவசாய நெற்பயிர்ச் செய்கை வன்னி மாவட்டத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதும் வன்னி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணத்தினால் நீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் வன்னி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஏக்கர் கணக்கானநெற்பயிர்ச் செய்கை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.


இவ்விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,

அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஏற்றுமதிக்கானநெற்பயிர்ச் செய்கை திட்டத்தின் கீழ் வன்னி மாவட்டமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

-இந்த நிலையில் வன்னி மாவட்டத்தில் பல ஏக்கர் கணக்கில் குறித்த நெற்பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் வன்னி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக நீருக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பல ஏக்கர் கணக்கில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்ச்செய்கை அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
-அரசாங்கத்தை நம்பி வன்னி மாவட்ட விவசாயிகள் பல ஏக்கர் கணக்கில் விவசாய நடிவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

-எனவே பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட விவசாயிகளுக்கு உடன் அரசாங்கம் நஸ்டஈட்டை வழங்க வேண்டும் எனவும்,எஞ்சியுள்ள நெற்பயிர்ச்செய்கையினை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் விவசாய அமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள வன்னி மாவட்ட விவசாயிகளுக்கு அரசாங்கம் உடன் நஸ்டஈட்டை வழங்க வேண்டும்-செல்வம் எம்.பி Reviewed by NEWMANNAR on August 11, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.