அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனொருவன் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம்

மன்னாரில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவனொருவன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு நேற்று திங்கட்கிழமை மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.


மன்னார், தலைமன்னாரின் பியர் பகுதியிலுள்ள கடற்கரைப்பகுதிக்கு அண்மித்த காட்டுப்பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தின்போது 3 சிறுவர்கள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த இச்சிறுவர்கள் விளையாட்டு பொருளென நினைத்து வெடிபொருளினை எடுத்து விளையாடியபோது அது வெடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்தவர்களான பிரபு (வயது 14), கமாஸ் (வயது 14), சாள்ஸ் அன்ரனி (வயது 15) ஆகியோரே காயமடைந்தவர்களாவர். இவர்களில் கமாஸ் (வயது 14) என்ற சிறுவனே மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏனைய 2 சிறுவர்களும் தொடர்ந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தலைமன்னார் வெடிப்புச் சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவனொருவன் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றம் Reviewed by NEWMANNAR on September 25, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.