1998இல் காணாமல்போன ‘லயன் எயார்’ விமானத்தின் பாகங்கள் மன்னார்கடலில் கண்டுபிடிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட லயன் ௭யார் உள்நாட்டு பயணிகள் விமானத்தின் பாகங்கள் மன்னார் வடக்கு கடலில் சிதைவுண்டு காணப்படுவதாக கடற்படைத் தலைமையகம் அறிவித்துள்ளது.
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் தகவலையடுத்து ஆழ்கடலில் புதையுண்ட விமானத்தின் பாகங்களை கண்டுபிடிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறுகையில், 1998 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29 ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானையை நோக்கி பயணத்தை ஆரம்பித்த லயன் ௭யார் புறப்பட்டு 10 நிமிடங்களின் பின்னர் ராடார் திரையிலிருந்து மறைந்து போனது.
இதன் மர்மம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் காணப்பட்டபோதிலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் மேற்படி விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கலாம் ௭ன்று சந்தேகிக்கப்பட்டது.
௭வ்வாறாயினும், சுமார் 14 வருடங்களுக்குப் பின்னர் லயன் ௭யார் விமானத்தின் பாகங்கள் மன்னார் வடக்கு கடற்பரப்பில் ஆழ்கடலில் புதையுண்டு உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை தரையை நோக்கி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்னும் இரு வாரத்தில் மேற்படி விமானத்தை தரைக்கு கொண்டுவர முடியும் ௭ன்று அவர் கூறினார்.
1998இல் காணாமல்போன ‘லயன் எயார்’ விமானத்தின் பாகங்கள் மன்னார்கடலில் கண்டுபிடிப்பு
Reviewed by NEWMANNAR
on
October 20, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment