அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேசாலை கொள்ளைச்சம்பவம்-2 சந்தேக நபர்கள் கைதாகி விளக்கமறியல்

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த வியாழக்கிழமை இரவு இடம் பெற்ற கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கடந்த சனிக்கிழமை இரவு தலைமன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த 2 சந்தேக நபர்களும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த இரு சந்தேக நபர்களையும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


 மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் கடந்த வியாழக்கிழமை இரவு உட்சென்ற திருடர்கள் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள்,பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றுள்ளனர். இந்த நிலையில் குறித்த வீட்டின் உரிமையாளர்கள் குறித்த திருட்டுச்சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸில் மறுநாள் வெள்ளிக்கிழமை முறையிட்டுள்ளனர்.

 இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையிலான பொலிஸ் குழவினர் புலன் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் குறித்த 2 சந்தேக நபர்களும் கடந்த சனிக்கிழமை இரவு பேசாலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தலைமன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமை பொலிஸ் அதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.

 இந்த நிலையில் குறித்த 2 சந்தேக நபர்களும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைகளை மேற்கொண்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (4-11-2012)தலைமன்னார் பொலிஸாரினால் மன்னார் நீதவான் ஏ.யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே குறித்த 2 சந்தேக நபர்களையும் இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மன்னார் பேசாலை கொள்ளைச்சம்பவம்-2 சந்தேக நபர்கள் கைதாகி விளக்கமறியல் Reviewed by NEWMANNAR on November 05, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.