மன்னாரில் அனர்த்த முன்னறிவித்தல் தொடர்பாக உயர்மட்டக்கலந்துரையாடல்.
அனர்த்த முன்னறிவித்தல் திட்டத்தின் கீழ் அனர்த்த முன்னறிவித்தல் தொடர்பான உயர் மட்டக்கலந்துரையாடல் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட செயலகத்தின் ஜெய்கா மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத்ரவீந்திர தலைமை தாங்கினார்.
இதன் போது நகர சபை, பிரதேச சபைகளின் தலைவர்கள்,வைத்தியர்கள், இராணுவம்,பொலிஸ் ,கடற்படை அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது டெங்கு மற்றும் முன் அபாயம் தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மன்னார்,தலைமன்னார்,விடத்தல் தீவு ,இலுப்பக்கடவை ஆகிய 4 பொலிஸ் நிலையங்களுக்கும் அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவிக்கும் ஒலிபெருக்கிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்விற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத்ரவீந்திர தலைமை தாங்கினார்.
இதன் போது நகர சபை, பிரதேச சபைகளின் தலைவர்கள்,வைத்தியர்கள், இராணுவம்,பொலிஸ் ,கடற்படை அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது டெங்கு மற்றும் முன் அபாயம் தொடர்பான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.முகமட் றியாஸ் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மன்னார்,தலைமன்னார்,விடத்தல் தீவு ,இலுப்பக்கடவை ஆகிய 4 பொலிஸ் நிலையங்களுக்கும் அனர்த்த முன்னெச்சரிக்கை அறிவிக்கும் ஒலிபெருக்கிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னாரில் அனர்த்த முன்னறிவித்தல் தொடர்பாக உயர்மட்டக்கலந்துரையாடல்.
Reviewed by NEWMANNAR
on
November 05, 2012
Rating:
No comments:
Post a Comment