அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழா

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டிய நிறைவுநாள் நிகழ்வுகள் கடந்த 29ஆம் திகதித வியாழக்கிழமை மாலை 3.00 மணிக்கு மன்னார் நகரமண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் நகரசபையினுடைய நூலக ஆலோசனைக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்விழாவிற்கு மன்னார் நகரபிதா திரு. எஸ். ஞானப்பிரகாசம் தலைமைதாங்கினார்.
மன்னார் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திரு. எம். ஜே. துரம் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
  இந்நிகழ்வின்போது 2012ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில் வழங்கல் நிகழ்வும் மன்னார் மாவட்டத்தில் நூல்களை வெளியிட்ட எழுத்தாளர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.







  மன்னார் நகரசபைச் செயலாளர் திருமதி பேனடெற் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கலையருவி நிறுவனத்தின் இயக்குனரும் எழுத்தாளருமாகிய அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுதிதி சிறப்புரை ஆற்றினார். மன்னார் அமுதன், எழுத்தளார் ஜே. ஆர். மயூரன் ஆகியோரும் இந்நிகழ்வில் உரை நிகழ்த்தினர். நிகழ்வுகள் யாவும் மன்னார் நகரசபையின் நூலகர் ஜனாப் ஹசன் குத்தூஸ் அவர்களின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்றன.
மன்னாரில் தேசிய வாசிப்பு மாத நிறைவு விழா Reviewed by NEWMANNAR on November 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.