மன்னாரில் தெரு மின் விளக்குகளை பராமறிக்கும் பொறுப்பு இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை-மன்னார் நகர சபை
மன்னார் நகரசபைக்குற்பட்ட எல்லைகளுக்குள் காணப்படும் அனைத்து தெரு மின் விளக்குகளையும் பராமரிக்கும் பனியினை விரைவில் இலங்கை மின்சார சபையிடம் கையளிக்கவுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
மன்னார் நகரசபை நிருவாக எல்லைக்குள் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள் காணப்படுகின்றது. குறித்த மின் விளக்குகளில் சுமார் 400 மின்விளக்குகளை மன்னார் நகர சபைக்கு புதிதாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின் சிறிது காலத்தில் பொருத்தப்பட்ட நவீன ரக விளக்குகள் என நகர சபை உறுப்பினர் குமரேஸ் தெவிவித்தார்.
மின் விளக்குகளும் நன்கு பராமறிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதி உன்னத பயனை அதன் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் நோக்குடனே இலங்கை மின்சார சபையிடம் தெரு மின் விளக்குகளை பராமறிக்கும் பொருப்பை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மன்னார் நகர சபையின் நிருவாக எல்லைக்குல் தற்போது பொது மக்கள் எதிர்நோக்கி வரும் வடிகால் அமைப்பு,உள்ளக வீதிகள், உற்பட அணைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கு நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னார் நகரசபை நிருவாக எல்லைக்குள் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தெரு மின் விளக்குகள் காணப்படுகின்றது. குறித்த மின் விளக்குகளில் சுமார் 400 மின்விளக்குகளை மன்னார் நகர சபைக்கு புதிதாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதன் பின் சிறிது காலத்தில் பொருத்தப்பட்ட நவீன ரக விளக்குகள் என நகர சபை உறுப்பினர் குமரேஸ் தெவிவித்தார்.
மின் விளக்குகளும் நன்கு பராமறிக்கப்பட்டு பொது மக்களுக்கு அதி உன்னத பயனை அதன் மூலம் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் நோக்குடனே இலங்கை மின்சார சபையிடம் தெரு மின் விளக்குகளை பராமறிக்கும் பொருப்பை வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் மன்னார் நகர சபையின் நிருவாக எல்லைக்குல் தற்போது பொது மக்கள் எதிர்நோக்கி வரும் வடிகால் அமைப்பு,உள்ளக வீதிகள், உற்பட அணைத்து பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்வதற்கு நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் தெரு மின் விளக்குகளை பராமறிக்கும் பொறுப்பு இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை-மன்னார் நகர சபை
Reviewed by NEWMANNAR
on
November 13, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment