அண்மைய செய்திகள்

recent
-

செய்மதிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை: அனுஷ--(Photo&Video)

சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து இன்று ஏவப்படவிருந்த செய்மதிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை என்று இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் அனுஷ பல்பிட்ட தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,


இந்த செய்மதியை விண்வெளிக்கு ஏவுவதில் அரசாங்கம் எவ்விதத்திலும் தொடர்புடவில்லை. இந்த முயற்சி ஒரு தனியார் நிறுவனம் முன்னெடுத்ததாகும். இதில் நாம் சம்பந்தப்படவில்லை. ஆனால் இந்த கம்பனி இலங்கையிலுள்ள நிறுவனங்களுக்கு செய்மதி சேவைகளை வழங்க அனுமதி கேட்டு தொலைத்தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்துள்ளது. நாம் இன்னும் இதற்கு அனுமதி வழங்கவில்லை.

தொலைத் தொடர்பு செய்திகளிலிருந்து தகவல்களை பெற்றுக்கொடுக்கும் இரண்டு நிலையங்கள் இலங்கையில் உள்ளன. ஆனால் இவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதி இந்த செய்மதி தொடர்பில் பெறப்படவில்லை என்றும் என்றார். 

இதேவேளை இது தொடர்பில் விஞ்ஞான விவகார சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவிக்கையில்,

அங்கீகரிக்கப்பட்டதும் ஜனாதிபதி ராஜபக்ஷவின் கடைசி மகன் ரோஹிதவினால் ஆதரவளிக்கப்பட்டதுமான திட்டத்துக்கு அமைய தொலை தொடர்பாடல் செய்மதி ஒன்று விண்வெளிக்கு ஏவப்படவுள்ள போதும் இந்த விடயத்தில்  அரசாங்கம் தனது ஈடுபட்டை விலக்கிக்கொண்டுள்ளது என்றார்.




செய்மதிக்கும் அரசுக்கும் தொடர்பில்லை: அனுஷ--(Photo&Video) Reviewed by NEWMANNAR on November 22, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.