மன்னார்-மதவாச்சி பிரதான வீதி விபத்தில் -குடும்பஸ்தர் பலி,மூவர் காயம்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, பரையநாளன் குளம் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம் பெற்ற விபத்துச்சம்பவத்தில் மன்னார் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்ததோடு மேலும் 3 பேர் காயடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,, -
மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஜெசுர்(வயது-45) என்பவரும் அவருடைய மனைவி மற்றும் 5,9 வயதுடைய மகன்,மகள் ஆகிய 4 பேரும் முச்சக்கர வண்டியொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியவிற்கு சென்றுள்ளனர். தனது பிள்ளை ஒருவருக்கு கண் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனைகளை முடித்த நிலையில் குறித்த 4 பேரும் மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கடும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் போது பரையநாளன் குளம் பகுதியில் வரும் போது எருமை மாடு ஒன்று குறுக்காக பாய்ந்த போது முச்சக்கர வண்டியை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்த போது மடு பிரதான வீதியூடாக வந்த கூலர் ரக வாகனம் எதிர்பாராத விதத்தில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த முகமது ஜெசுர்(வயது-45) படுகாயமடைந்ததோடு அவருடைய மனைவி மற்றும் இரு சிறு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் குறித்த இடத்திலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளனர்.
பின் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வளியில் முகமது ஜெசுர்(வயது-45) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த இவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது. உயிரிழந்தவரது ஜனாஸா மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,, -
மன்னார் உப்புக்குளம் கிராமத்தைச் சேர்ந்த முகமது ஜெசுர்(வயது-45) என்பவரும் அவருடைய மனைவி மற்றும் 5,9 வயதுடைய மகன்,மகள் ஆகிய 4 பேரும் முச்சக்கர வண்டியொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை வவுனியவிற்கு சென்றுள்ளனர். தனது பிள்ளை ஒருவருக்கு கண் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்குச் சென்று கண் பரிசோதனைகளை முடித்த நிலையில் குறித்த 4 பேரும் மன்னார் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கடும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் போது பரையநாளன் குளம் பகுதியில் வரும் போது எருமை மாடு ஒன்று குறுக்காக பாய்ந்த போது முச்சக்கர வண்டியை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முயற்சித்த போது மடு பிரதான வீதியூடாக வந்த கூலர் ரக வாகனம் எதிர்பாராத விதத்தில் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த முகமது ஜெசுர்(வயது-45) படுகாயமடைந்ததோடு அவருடைய மனைவி மற்றும் இரு சிறு பிள்ளைகளும் காயமடைந்த நிலையில் குறித்த இடத்திலேயே நீண்ட நேரம் கிடந்துள்ளனர்.
பின் மன்னார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வளியில் முகமது ஜெசுர்(வயது-45) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த இவரது மனைவி மற்றும் இரு பிள்ளைகளும் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றது. உயிரிழந்தவரது ஜனாஸா மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி விபத்தில் -குடும்பஸ்தர் பலி,மூவர் காயம்.
Reviewed by NEWMANNAR
on
December 19, 2012
Rating:

No comments:
Post a Comment