(2ம் இணைப்பு )மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் இது வரை 5107 குடும்பங்களைச் சேர்ந்த 20250 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
-இவர்களில் 2049 குடும்பங்களைச் சேர்ந்த 7023 பேர் இடம் பெயர்ந்துள்ள நிலையில் 38 நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை 25 குடும்பங்களைச் சேர்ந்த 711 பேர் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம்பகுதியில் நிர்க்கதியான நிலையில் உள்ளனர்.
முசலியில் 2805 குடும்பங்களைச் சேர்ந்த 12516 பேர் பாதிப்படைந்த நிலையில் உள்ளனர்.
மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளதன் காரணத்தினால் குஞ்சுக்குளம் துருசின் நீர் மட்ட அளவு 18 அடி 10 அங்குமாக உயர்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதே சமயம் மன்னார் கமநல திணைக்களத்திற்கு சொந்தமான 27 சிறு குளங்களும் உடைப்பெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இடம் பெயர்ந்த மக்களுக்கான அவசர தேவைகளை குறித்த கிராமங்களுக்கு பொறுப்பான பிரதேச செயலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதே வேளை முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் றிஸாட் பத{யுதின் அவர்களின் வேண்டு கோளுக்கு அமைவாக அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைககப்பட்டுள்ளது.
தாழ்வுபாட்டு கடற்கரையில் இருந்து தாழ்வுபாட்டு கடற்படை அதிகாரி லெப்டினன் கொமான்டர் சேனா நயக்க அவர்களின் தலைமையில் உலர் உணவுகள் மற்றும் மருந்து பொருட்கள் என்பன அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
(மன்னார் நிருபர்)
(2ம் இணைப்பு )மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 28, 2012
Rating:
No comments:
Post a Comment