அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பேராயரிடம் புலனாய்வினர் விசாரணை நடத்தப்பட்டமைக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம்


மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையிடம் இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடாத்தியமைக்கு கிறிஸ்தவ ஒத்துழைப்பு அமைப்பு (Christian Solidarity Movement - CSM) கண்டனம் வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்த வேண்டாம் என அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தமைக்காகவே அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் இதற்கு முன்னர் சில தடவைகளும் மன்னார் ஆயரிடம் விசாரணை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்தவ மத கோட்பாடுகளுக்கு அமைவாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக தைரியமான முறையில் மன்னார் பேராயர் குரல் கொடுத்து வருவதாகவும், இது பெருமையளிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மன்னார் பேராயரிடம் புலனாய்வினர் விசாரணை நடத்தப்பட்டமைக்கு கிறிஸ்தவ அமைப்பு கண்டனம் Reviewed by NEWMANNAR on December 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.