அண்மைய செய்திகள்

recent
-

யாழிலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய காரியாலயத்தின் இணைப்பாளர் ரி. கனகராஜ் தெரிவித்தார்.


பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நேற்றுவரை யாழ். மாவட்டத்திலிருந்து 39 பேரும் கிளிநொச்சியிலிருந்து 4 பேருமாக மொத்தம் 43 பேர் கடந்த சில வாரங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 5 ஆம் திகதி கிளிநொச்சியில் ஒரு நபரும் கடந்த 17 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருவரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யாழிலும் கிளிநொச்சியிலும் 43 பேர் கைது Reviewed by NEWMANNAR on December 20, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.