அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் ஆய்வின் தரம் உயர வேண்டும் வட மாகாண இலக்கிய ஆய்வரங்கில் தமிழ் நேசன் அடிகளார்

தமிழாய்வை புதிய தளங்களிலும், புதிய கோணங்களிலும் நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். தமிழ் மொழி இலக்கிய ஆய்வைப் பொறுத்தவரை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. பொருளியல், வரலாறு, அறிவியல் போன்ற துறை சார்ந்த ஆய்வுகள் நாடனைத்திற்கும், பல மொழியினருக்கும் பொதுவானவை.
எனவே அவற்றின் தரம் பற்றி யாரும் அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் தமிழாய்வுகள் அனேகமாக தமிழ் பேசுபவர்களால்தான் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் ஆய்வுகள் குறுகிய வட்டத்திற்குள் சுற்றிச் சுற்றி வருவதால் அவற்றின் தரம் பற்றி அடிக்கடி கேள்வி எழுப்பப்படுகின்றது என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் குறிப்பிட்டார்.
  கடந்த (டிசம்பர் மாதம்) 8ஆம், 9ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வடமாகாண தமிழ் இலக்கியப்பெருவிழாவின் ஒரு பகுதியான 'வடமாகாண தமிழ் இலக்கியத்தின் செல்நெறிகள்' என்ற தலைப்பில் இடம்பெற்ற ஆய்வரங்கின் இரண்டாம் நாள் அன்று 'பேராசிரியர் கா. சிவத்தம்பி' அரங்கில்' 'மன்னார் மாவட்டத்தின் இலக்கிய முயற்சிகள்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து உரையாற்றும்போதே தமிழ் நேசன் அடிகளார் இவ்வாறு கூறினார்.
  மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையத்தின் இயக்குனரும், 'மன்னா' என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியரும், மன்னார் மாவட்ட சர்வமத பேரவை மற்றும் மன்னார் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் தலைவருமான தமிழ் நேசன் அடிகளார் தனது உரையில்  தொடர்ந்து கூறியதாவது,
  ஆற்றின் வெள்ளம் மாற்றமின்றிச் செல்வதுபோல தோன்றினாலும், புதுப்புது வெள்ளங்கள் ஆற்றின் வாழ்க்கையை வளமாக்குகின்றன. புதுப்புதுக் கருத்துக்களை ஒரு மொழி ஏற்கும்பொழுதுதான் அம்மொழி வளர்ச்சி பெறுகின்றது. மொழி என்பது தேங்கிக்கிடக்கும் ஏரியன்றுளூ அது இடையறாது ஓடிக்கொண்டிருக்கும் ஆறு
  இவ்வாறான மாநாடுகளின் புதிய ஆய்வுகள் புதிய முடிவுகள் தமிழுக்கு மேலும் வளம் சேர்ப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆய்வு என்ற சொல்லின் பொருள் 'ஏதேனும் ஒன்றை மிக்க கவனத்தோடும் விடாமுயற்சியோடும் நுட்பமாய் தேடுவது' என்பதாகும். இங்கே ஏதேனும் ஒன்று என்பது புதிய மெய்மைகளை குறிக்கும். சில கொள்கைவிதிகளை வகுக்கக்கூடிய அளவு, அடிப்படையான மெய்மைகளைத் தேடிக் காண்பதே ஆய்வாகும்.
  ஆய்வு என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படுகின்ற றிசேர்ச் (சுநளநயசஉh) என்ற சொல் பிரஞ்சு மொழிச் சொல்லான ரிசெர்ச்சர்' (சுநஉநயசஉhநச) என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஓன்றைப் பற்றி மிக அணுக்கமாகவும், நுணக்கமாகவும் தேடும் திறனை இது குறிக்கிறது. உண்மையைக் கண்டறிய உந்துகின்ற நாட்டமே ஆய்வாக மலர்கிறது. அறிவின் அடிப்படையில் சான்றாதாரங்களைக்கொண்டு உண்மை காணச் செய்யப்படும் எவ்வித முயற்சியும் ஆராய்ச்சி என அழைக்கப்படுகின்றது.
 ஆய்வுக் கட்டுரையின் கருத்துக்கள் உணர்ச்சிக்கு இடம்கொடுக்காமல் அறிவுக்கு முதன்மைகொடுத்து எழுதப்படவேண்டும். தமிழ் பற்று, இன உணர்வு போன்ற காரணங்களினால் நமது இலக்கியம் சார்ந்த சில உண்மைகளை நாம் சொல்லத் தயங்கலாம். இது ஆரோக்கியமான நிலைப்பாடு அல்ல. உள்ளத்தில் உணர்ந்த உண்மைகளை மறைக்காமல், அஞ்சாமல் துணிவுடன் முன்வைக்க வேண்டும். அப்போதுதான் நமது தமிழ் இலக்கியம் ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும்.
  வெறுமனே நமது எண்ணங்களையும், உணர்வுகளையும் அல்ல, மாறாக நமது ஆய்வின் முடிவுகளை, உள்ளுர உணர்ந்த உண்மைகளை ஒளிவு மறைவின்றி நாம் சொல்ல வேண்டும். நாம் வெளிப்படுத்தும் முடிவுகளை, உண்மைகளை கொள்ளுவதும் தள்ளுவதும் தமிழ் உலகத்தைப் பொறுத்தது.
   











படங்களுக்கான விளக்கம்
ஆய்வரங்க மண்டபம்
ஆய்வாளர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்படுகின்றனனன்.
பேராதனைப் பல்ககைலக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் வ. மகேஸ்வரன் மங்கல விளக்கேற்றுகின்றார்.
அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் மங்கல விளக்கேற்றுகின்றார்.
இரண்டாம் நாள் ஆய்வரங்கின் இரண்டாவது அமர்வுக்கு தலைமை தாங்கிய யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசியர் சிவலிங்கராஜா மற்றும் ஆய்வாளர்களான தமிழ் நேசன் அடிகளார், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் க. சிறிகணேசன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருக்கின்றனர்.
தமிழ் நேசன் அடிகளார் ஆய்வுரையைச் சமர்ப்பிக்கின்றார்.
தமிழ் ஆய்வின் தரம் உயர வேண்டும் வட மாகாண இலக்கிய ஆய்வரங்கில் தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on December 11, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.