அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் மலேரியா காய்ச்சல் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளுக்கு விழிப்புனர்வு கருத்தமர்வு.(படங்கள் )


2015 ஆம் ஆண்டுக்குள் மலேரியா அற்ற இலங்கையை உருவாக்குவோம் எனும் தொணிப்பொருளில் மன்னார் சர்வோதைய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த விழிப்புனர்வு  கருத்தரங்கு இன்று வியாழக்கிழமை காலை மன்னார் கொளிடே விடுதியில் மன்னார் சர்வோதைய அமைப்பின் இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன்  தலைமையில் இடம் பெற்றது.


-இதன் போது அரச திணைக்களங்களில் அதிகாரிகள்,ஊடகவியலாளர்கள் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

-மலேரியா காய்ச்சல் பரவுவது குறித்தும் அவற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் முகமாக  மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புரங்களில் உள்ள மக்களுக்கு விழிப்புனர்வு ஏற்படுத்தும் முகமாக குறித்த கருத்தரங்கு இடம் பெற்றது.






இதன் போது மலேரியா நுளம்பை அடையாளம் காணுதல்,குறித்த நோய் தொடர்பாக மக்களை எவ்வாறு விழிப்புனர்வு ஏற்படுத்துதல் போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதன் போது பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் அரவிந்தன்,சர்வோதைய திட்ட இணைப்பாளர் எஸ்.ரி.குமாரகே,சர்வோதைய அமைப்பின் ஜீ.எப்.ஏ.ரி.எம்.நிகழ்ச்சித்திட்ட இயக்குனர்  புத்திக்க கப்பாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

 குறித்த விழிப்புனர்வு கருத்தரங்கில் அரச திணைக்களங்களின் அதிகாரிகள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வினோத் 
மன்னாரில் மலேரியா காய்ச்சல் தொடர்பில் உயர் மட்ட அதிகாரிகளுக்கு விழிப்புனர்வு கருத்தமர்வு.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on January 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.