இதுதானா தாய் மனசு ? {கவிதை}
சீராட்டி,பாராட்டி,சோறூட்டி வளர்த்த -உன்னை
ஒரு பிடி சோறூட்டி பார்க்க முடியாத
வக்கத்த பயலாய் நானிருக்கிறேன் ..........
உன் போன்ற அம்மாக்கள்
தாய்ப்பாலில் உசிர் கலந்து ஊட்டிய போதும்
என் போன்ற பிள்ளைகள்-நன்றி
மறந்து நிற்கின்றோமே மன்னிப்பாயா?
நீ செய்த தியாகங்கள்
நானறிந்த போதும் கூட
நன்றிகெட்ட மகனாய்த் தானே
இன்னும் நான் ... .மன்னிப்பாயா?
பக்கத்தில் இருந்த போதும் .
பாவியாய் தானிருந்தேன்
தூரத்தில் இருக்கின்றேன்
துடிக்குதம்மா மனசு.. மன்னிப்பாயா?
என்னைப்போல் எத்தனைபேர்
வாய் பேச முடியாதவராய் -பாழ் பட்ட
உலகத்தில் வாழத்தான் செய்கின்றனரோ
உன்னைப்போல் தாய் மனசை புண்படுத்தி'..............
நன்றி கெட்ட உலகத்தில்
நானிருந்து என்னபயன் என்றெண்ணி
வாழ்வுதனை முடித்து விட -முயலுகிற
போதினிலும் நீவந்து தடுக்கின்றாய் ....
இதுதானா தாய் மனசு ?
இன்னுமொரு முறை பிறப்பது
நிஜமென்று இருந்து விட்டால் -நானுனக்கு
தாயாக வரவேண்டும்- அதுவரை
என்னை மன்னிப்பாயா?.
*சந்துரு*
இதுதானா தாய் மனசு ? {கவிதை}
Reviewed by NEWMANNAR
on
February 08, 2013
Rating:

No comments:
Post a Comment