இன்னும் கண் திறக்காத மன்னார் நகர சபை
மன்னார் நகரில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து பஸ் நிலையத்திற்குள் பயணிகளின் நலன் கருதி இலங்கை போக்குவரத்து சபையினால் கட்டப்பட்ட கட்டத்தினை தற்போது இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவனங்கள் தங்களின் வியாபாரங்களை பிரசித்தி பெற வைப்பதற்காக பயன்படுத்துகின்றன இதற்கு இப் படங்கள் சாட்சி.
இன்று காலை தேசிய லொத்தர் சபையினால் பயணிகள் பஸ் தரிப்பிடத்திற்குள் சுவீப் டிக்கட்களை விற்பனை செய்தனர். பயணிகள் பஸ் தரிப்பிடத்தில் இவ்வாறான நடவடிக்கையினால் பயணிகஞக்கு இடையுறாகவும் மற்றும் விபத்துக்கள் ஏற்படுவதற்கு அதிகமான சாத்தியங்கள் உள்ளன.
உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு உதவிகள் செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பயணிகள் வேண்டிக்கொள்கின்றனர். கொழும்பில் உள்ள சில நகரங்கள் அழகூட்டகப்படுகின்றன ஏன் எல்லா வழங்களையும் கொண்ட மன்னார் நகரம் இன்னும் அழகு படுத்தப்படவில்லை?
இனியாவது கண் திறக்குமா மன்னார் நகர சபை?
Shm Wajith
இன்னும் கண் திறக்காத மன்னார் நகர சபை
Reviewed by Admin
on
March 09, 2013
Rating:

No comments:
Post a Comment