அண்மைய செய்திகள்

recent
-

நெற்பயிரை மாடுகள் மேய்வதாக விவசாயிகள் விசனம்.


மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட வயற்காணிகளினுள் மாடுகளின் உற்பிரவேசம் அதிகரித்த நிலையில் காணப்படுவதாகவும்,இதனால் விளைந்த நெற்பயிர்களை மாடுகள் மேய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது நெல் அறுவடை இடம் பெற்று வருகின்ற நிலையில் மாடு வளர்ப்பாளர்கள் அவற்றை மேய்வதற்காக திறந்து விடுகின்றனர்.

இந்த நிலையில் குறித்த மாடுகள் அருகில் உள்ள விவசாய காணிகளுக்குள் சென்று விளைந்த நெற்பயிர்களை மேய்வதாக பாதீக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பல அதிகாரிகளுக்கு முறையிட்டும் எவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை என அந்த விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.




நெற்பயிரை மாடுகள் மேய்வதாக விவசாயிகள் விசனம். Reviewed by Admin on March 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.