இந்திய மீனவர்கள் 30 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு
இந்திய மீனவர்கள் 30 பேரையும் தொடர்ந்து மே மாதம் 6ஆம் திகதி வரை(06-05-2013) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் 30 இந்திய மீனவர்கள் தலை மன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போது குறித்த 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பினுள் ஐந்து டோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களை கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி(06-02-2013) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற் படையினரால் கைது செய்து பின்னர் தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலை மன்னார் பொலிஸார் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில் மீண்டும் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 30 மீனவர்களில் சுமார் 7 பேர் இன்று மதியம் நீதிமன்றத்தினுள் உண்ணாவிரதமிருக்க முயற்சிகளை மேற்கொண்டனர். தம்மை விடுதலை செய்யும் படி அவர்கள் கோறிக்கை விடுத்த நிலையில் உண்ணாவிரதமிருந்தனர். குறித்த 30 பேருக்கும் வழங்கப்பட்ட மதிய உணவினை அவர்கள் உண்ண மறுத்தனர்.
இந்த நிலையில் மீனவர்களின்விடுதலைக்காக அங்கு வந்திருந்த இந்திய உயர்ஸ்தானிக பணிமனை அதிகாரிகள்இமன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்கள் குறித்த மீனவர்களுடன் நற்புரவு ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் மீண்டும் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டனர். இதன்போது குறித்த 30 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டார். இலங்கை கடற்பரப்பினுள் ஐந்து டோலர் படகுகளில் அத்துமீறி நுழைந்த 30 இந்திய மீனவர்களை கடந்த பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி(06-02-2013) தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற் படையினரால் கைது செய்து பின்னர் தலை மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலை மன்னார் பொலிஸார் அவர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த நிலையில் மீண்டும் அவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது தொடர்ந்து எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த 30 மீனவர்களில் சுமார் 7 பேர் இன்று மதியம் நீதிமன்றத்தினுள் உண்ணாவிரதமிருக்க முயற்சிகளை மேற்கொண்டனர். தம்மை விடுதலை செய்யும் படி அவர்கள் கோறிக்கை விடுத்த நிலையில் உண்ணாவிரதமிருந்தனர். குறித்த 30 பேருக்கும் வழங்கப்பட்ட மதிய உணவினை அவர்கள் உண்ண மறுத்தனர்.
இந்த நிலையில் மீனவர்களின்விடுதலைக்காக அங்கு வந்திருந்த இந்திய உயர்ஸ்தானிக பணிமனை அதிகாரிகள்இமன்னார் பிரஜைகள் குழுவின் முக்கியஸ்தர்கள் குறித்த மீனவர்களுடன் நற்புரவு ரீதியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களின் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இந்திய மீனவர்கள் 30 பேருக்கு தொடர்ந்து விளக்கமறியல் நீடிப்பு
Reviewed by NEWMANNAR
on
April 26, 2013
Rating:

No comments:
Post a Comment