மன்னாரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக சமூகமட்ட தலைவர்களுக்கு விளக்கமளிப்பு {படங்கள் }
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் உள்ள 185 விடையங்கள் தொடர்பாக அடிமட்ட மக்களுக்கு தெழிவு படுத்தும் முகமாக மன்னார் சர்வோதைய அமைப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 10 சமூக மட்ட தலைவர்களுக்கு தெழிவு படுத்தும் விசேட கருத்தரங்கு ஒன்று இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் சிறினிவாசன் யுகேந்திரா தலைமையில் இடம் இடம் பெற்ற குறித்த கருத்தரங்கின் போது சட்டத்தரணி கோமலி பெரேரா மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஜெரோமி சில்லா ஆகியோர் கலந்து கொண்டு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் சமூக மட்ட தலைவர்களுக்கு விளக்கமளித்தனர்.
மன்னாரில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக சமூகமட்ட தலைவர்களுக்கு விளக்கமளிப்பு {படங்கள் }
Reviewed by NEWMANNAR
on
April 10, 2013
Rating:
No comments:
Post a Comment