தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைப்பு
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுளைந்த 30 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கடற்படையினர் கைது செய்த நிலையில் அவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது குறித்த மீனவர்களை இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை கடற்பரப்பினுள் வ இலுவைப்படகுகளில் வருகை தந்து அத்துமீறி நுளைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 30 இந்திய மீனவர்களை தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைது செய்த நிலையில் அவர்களை கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரனைகளை மேற்கொண்ட தலைமன்னார் பொலிஸார் நேற்று ஞாயிற்றுக்கிழமை மன்னார் நீதவான் அந்தோனிப்பிள்ளை யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது குறித்த மீனவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவிட்டார்.குறித்த 5 படகுகளையும் தலைமன்னார் கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.
இதே வேளை கடந்த மாதம் 13 ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 30 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் வைப்பு
Reviewed by NEWMANNAR
on
April 08, 2013
Rating:
No comments:
Post a Comment