அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் தந்தை செல்வா பிறந்த தின நிகழ்வு -படங்கள்

ஈழத்து காந்தி என்றழைக்கப்படும் தமிழ் தலைவர் அமரர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 115 ஆவது பிறந்த தின விழா இன்று திங்கட்கிழமை  (1-04-2013)  காலை தந்தை செல்வா அறம்;காவலர் அமைப்பின் தலைவர் பேதுரு அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்றது.இன்று   காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைந்திருக்கும் தந்தை செல்வா திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணுவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில்  நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதன் போது   சிறப்புரைகளும்,சமயத்தலைவர்களின் ஆசியுரைகளும் இடம்பெற்றது.

குறித்த நிகழ்விற்கு மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,மன்னார் பிரதேச சபையின் மலைவர் மார்ட்டின் டயேஸ்,உப தலைவர் அந்தோனி சகாயம்,நகர சபை,பிரதேச சபை உறுப்பினர்கள்,மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை செபமாலை அடிகளார், தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ மாவட்ட பொறுப்பாளர் இராசேந்திரம் பற்றிக் உற்பட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வு தந்தை செல்வா அறம்;காவலர் அமைப்பின் தலைவர் பேதுரு அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.






மன்னாரில் தந்தை செல்வா பிறந்த தின நிகழ்வு -படங்கள் Reviewed by Admin on April 01, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.