அல்-கொய்தா குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை : கெஹலிய
.jpg)
தெரிவித்தார்.
ஊடகத்துறையின் கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையிலும் பங்களாதேஷிலும் அல்-கொய்தாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்காவின் இணையத்தளம் ஒன்று ஈரானிய புலனாய்வுத் தகவல் தெரிவித்ததாக செய்திவெளியிட்டுள்ள போதும் அது குறித்து அமெரிக்கா எம்மிடம் உத்தியோகபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இதேவேளை, இது குறித்து நாம் எமது வெளிவிவகார அமைச்சினூடாக அமெரிக்காவிடம் வினவினோம். அது தொடர்பில் அமெரிக்காவும் எமக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
அல்-கொய்தா குறித்து அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை : கெஹலிய
Reviewed by NEWMANNAR
on
April 19, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment