அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இரு பெண் மாணவர்கள் சாரணர்கள் விருது பெற்று சாதனை!

தமிழ் பிரதேசத்தில் முதல் முறையாக வவுனியாவை சேர்ந்த இரு பெண் சாரணர்கள் ஜனாதிபதி விருது பெற்று சாதனை படைத்துள்ளனர் என சாரணர் அமைப்பின் வவுனியா மாவட்ட ஆணையாளர் எம். எஸ் பத்மநாதன் தெரிவித்தார்.


 வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி பெண் சாரணர் துருப்பைச் சேர்ந்த மாணவிகளான செல்வி நிலாந்தி சிவஞானசுந்தரம் செல்வி இராசலிங்கம் நிலானி ஆகிய இருவருமே சாரணர் உயர் விருதான ஜனாதிபதி விருதினை பெற்றுள்ளனர்.

 அகில இலங்கை ரீதியில் பெண் சாரணர்கள் ஜனாதிபதி விருதினை பெற்றுக்கொண்ட வரிசையில்5 ஆம்6 ஆம் நிலைகளில் உள்ள இவ் இருவரும் வவுனியா மாவட்ட சாரணர் சமூகத்திற்கும் கல்லூரிக்கும் பெருமையை தேடித்தந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியாவில் இரு பெண் மாணவர்கள் சாரணர்கள் விருது பெற்று சாதனை! Reviewed by NEWMANNAR on May 02, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.