பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது - சர்வதேச மன்னிப்புச் சபை
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படும் வரை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இலங்கையில் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகளுக்காக முன்னிற்கின்ற ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நெருக்கடியில் சிக்குவதாக சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடிய தைரியம் மிக்கவர்கள் துன்புறுத்தப்படுவதற்கான சூழ்நிலை நிலவுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஊடக சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மட்டுப்படுத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனிநபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற துரித விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகளின் நிலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மனித உரிமைகளுக்காக முன்னிற்கின்ற ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் நெருக்கடியில் சிக்குவதாக சர்வதேச மன்னிப்புச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக பேசக்கூடிய தைரியம் மிக்கவர்கள் துன்புறுத்தப்படுவதற்கான சூழ்நிலை நிலவுவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான பிரதிப் பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் குறிப்பிட்டுள்ளார். உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் உறுதிப்படுத்தப்பட வேண்டிய ஊடக சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் மட்டுப்படுத்த முயல்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை தனிநபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் குறித்து பாரபட்சமற்ற துரித விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதுடன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னர் இலங்கையில் மனித உரிமைகளின் நிலை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்துவதற்கு பொதுநலவாய நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் சர்வதேச பொதுமன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் நாடுகளுக்கான பிரதிப் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது - சர்வதேச மன்னிப்புச் சபை
Reviewed by NEWMANNAR
on
May 02, 2013
Rating:
No comments:
Post a Comment