அண்மைய செய்திகள்

recent
-

கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம்

கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை முன்வைப்பதற்கு தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்த நாரா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


 இதற்கமைய 07 10 10 10 10 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு கடற்றொழிலாளர்கள் தமது பிரச்சினைகளை தெரிவிக்க முடியும் என நாரா நிறுவனத்தின் தலைவர் சயூர சமரசுந்தர தெரிவித்தார்.

 அத்துடன் இதன்மூலம் கடற்றொழில் துறைசார் தகவல்களையும் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. கடற்றொழில் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் எதிர்காலத்தில் இந்த துறையின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்டங்கள் குறித்தும் இதனூடாக அறிந்துகொள்ள முடியும் என அவர் கூறினார்.

 அத்துடன் இந்த வசதியை பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் இதனூடாக பெற்றுக்கொள்ள முடியுமென நாரா நிறுவனத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.
கடற்றொழிலாளர்கள் பிரச்சினைகளை முன்வைக்க தொலைபேசி இலக்கம் Reviewed by Admin on May 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.