மீனவர்களுக்கான எரிபொருள் மானிய முத்திரையினை குறைப்புச் செய்யாது வழங்குக செல்வம் எம்.பி
-குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,,,,,
எரி பொருள் விலையேற்றத்தினால் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் மீனவர்களின் நலன் கருதி கடல் தொழில் மற்றும் நீரியல்வளத்துரை அமைச்சு மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்தை வழங்கி வந்தது. இந்த நிலையில் தற்போது மன்னார் மற்றும் முல்லைத்தீவு மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எரிபொருள் மானிய முத்திரைகளில் ஆட்குறைப்புச் செய்யப்பட்ட நிலையில் பல மீனவர்களுக்கு குறித்த எரிபொருள் மானிய முத்திரை வழங்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அந்த மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.ஆனால் மன்னார் மாவட்ட கடல் தொழில் பணிமனையின் அதிகாரிகள் குறித்த மானியக்குறைப்பு தொடர்பாக எவ்வித அறிவித்தல்களையும் உரியமுறையில் வழங்கவில்லை. எனவே கடல் தொழில் அமைச்சர் என்ற வகையில் பாதிக்கப்பட்ட மன்னார் மாற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு எவ்வித குறைப்பும் இன்றி அனைத்து மீனவர்களுக்கும் குறித்த எரிபொருள் மானிய முத்திரையினை வழங்க நடவடிக்கையினை உடன் மேற்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவடட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கடல் தொழில் மற்றும் நீரியல்வளத்துரை அமைச்சர் ராஜீத சேனாரத்ன அவர்களுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எரிபொருள் மானிய முத்திரையினை குறைப்புச் செய்யாது வழங்குக செல்வம் எம்.பி
Reviewed by Admin
on
May 01, 2013
Rating:
No comments:
Post a Comment