அண்மைய செய்திகள்

recent
-

அடிப்­ப­டை­ வ­ச­தி­க­ளின்­மையால் மக்கள் மீள் குடி­யேறத் தயக்கம்

தென்­னை­ம­ர­வடி மக்­களை மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்கை துரி­தப்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­கின்­ற­போதும் அடிப்­படை வச­திகள் இல்­லா­மை­யினால் அவர்கள் குடி­யேற ஆர்வம் காட்­டு­கி­றார்கள் இல்லை என தென்­னை­ம­ர­வடி மீள்­கு­டி­யேற்­றத்­துக்குப் பொறுப்­பான அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.


அவர் மேலும் குறிப்­பி­டு­கையில் பூர்­வீகக் கிரா­ம­மான தென்னை மர­வடிக் கிரா­மத்தில் இது­வரை 150 குடும்­பங்கள் குடி­யேற்­றப்­பட்­ட­போதும் இன்னும் 300க்கு மேற்­பட்ட குடும்­பங்கள் குடி­யேற்­றப்­ப­ட­வேண்­டி­யுள்­ளன.

இவர்­களின் அடிப்­படை வச­தி­களோ மின்­சாரம், நீர் பாட­சாலை, போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து கொடுக்­கப்­ப­டா­மை­யினால் முல்­லைத்­தீவு மாவட்­டத்­திலும் திரு­கோ­ண­ம­லை­யிலும் இடம்­பெ­யர்ந்து இருக்கும் இவர்கள் குடி­யேற ஆர்வம் காட்­டு­கி­றார்­க­ளில்லை.

நிரந்­தர உறு­தி­யில்­லாமல் அனு­ரா­த­புர நிர்­வாக மாவட்­டத்­துடன் இணைக்­கப்­பட்ட நிலை இப்­பொ­ழுது மாற்­றப்­பட்டு, தென்­ன­ம­ர­வ­டிக்­கி­ராமம் திரு­கோ­ண­மலை மாவட்­டத்­துடன் இணைக்­கப்­பட்­டி­ருப்­ப­தனால் அண்­மையில் காணி உரிமம் அற்ற 75 குடும்­பங்­க­ளுக்­கான காணி உறு­தி­கள் வ­ழங்­கப்­பட்­டுள்­ளன.

அத்­துடன் மக்கள் இல்லாத காலத்தில் பதவிபிரிபுர மக்களால் கையாளப்பட்டுவந்த இந்த கிராமத்தவர்களின் வயல் நிலங்களும் மீளப்பெறப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன என்றார்.


அடிப்­ப­டை­ வ­ச­தி­க­ளின்­மையால் மக்கள் மீள் குடி­யேறத் தயக்கம் Reviewed by Admin on June 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.