காணாமல் போன படைசிப்பாய் தூக்கிலிருந்து சடலமாக மீட்பு: இரணைமடுவில் சம்பவம்
நேற்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இரணைமடு படை முகாமில் பணியாற்றி வந்த சமிக்ஞை பிரிவைச் சேர்ந்த எஸ்.எம்.என்.ஜி படைப்பிரிவின் விக்கிரமசிங்க என்ற சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவார்.
இவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவரது சடலத்தை பார்வையிட்ட கிளிநொச்சி பதில் நீதிவான் சடலத்தை பிரேதப் பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
காணாமல் போன படைசிப்பாய் தூக்கிலிருந்து சடலமாக மீட்பு: இரணைமடுவில் சம்பவம்
Reviewed by Admin
on
June 29, 2013
Rating:

No comments:
Post a Comment