மன்னார் ஆயர் மற்றும் செல்வம் எம்.பி. ஆகியோர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்

இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அங்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள 14 ஆண் தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிட்டதுடன் அவர்களின் எதிர்பார்ப்புகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
இந் நிலையில் அங்குள்ள அரசியல் கைதிகள் தம்மை இவ்வளவு காலம் யாரும் வந்து தம்முடைய குறைகளை கேட்கவில்லை என கவலை தெரிவித்தனர்.
தமது வழக்கு தொடர்பான விடயங்களை பார்வையிடுமாறும் தமது வழக்குகளை மேற்கொள்வதற்கு வழக்கறிஞர்களை தொடர்புபடுத்திவிடுமாறும் இவ்வாறு தாம் சிறையில் இருப்பதால் தமது குடும்பங்கள் வறுமையில் வாடுவதாகவும் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்து மன்னார் ஆயரும் செல்வம் எம்.பி.யும் இணைந்து அவர்களின் குடும்ப வறுமைக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதாகவும் வழக்கறிஞர்கள் குறித்து கவனம் எடுப்பதாகவும் உறுதியளித்தனர். சிறையில் இருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்களையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர்.
மன்னார் ஆயர் மற்றும் செல்வம் எம்.பி. ஆகியோர் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு விஜயம்
Reviewed by NEWMANNAR
on
June 05, 2013
Rating:

No comments:
Post a Comment