அண்மைய செய்திகள்

recent
-

எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும்

 முசலிப் பரந்தபிரதேசத்தில் எவ்வித எரிபொருள் நிரப்பு நிலையமும் இல்லை.சிறு சிறு சில்லறைக் கடைகளில் எரிபொருள் விற்கப்படுவதைக் காணலாம். மண்ணெண்ணை நிரப்பு நிலையம்,பெற்றோல் டீசல் நிரப்பு நிலையம் என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படலாம்.எமது நாட்டிலுள்ள பல பிரதேசங்களிலும் பெற்றோலியக் கூட்டுதாபனங்களுடன் தொடர்புடைய நிரப்பு நிலையங்களும், ஐ,ஓ,சி.எனப்படும் இந்திய நிறுவனங்களுடன் தொடர்புடைய நிரப்பு நிலையங்களும் இயங்கிவருவதை அவதானிக்கலாம்.


எரிபொருள் நிரப்பு நிலையங்கள்,தனியார் துறையினராலும்,அரசின் கூட்டுறவுத்துறையினராலும் சிறப்பாக நடாத்தப்படுகின்றன.

ஆனால் முசலிப்பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராமங்களில் எவ்வித எரிபொருள் நிலையத்தையும் உருவாக்க தனியார் துறையினரோ? அல்லது அரசின் கூட்டுறவுச்சங்கத்தினரோ ? இதுவரை முன்வராமல் இருப்பது பெரும் ஆச்சரியமாகவும்,அதிர்ச்சியாகவும் உள்ளது.

 சில்லறைக்கடைகளில் எரிபொருட்களைப் பெற்றுக்கொள்வதைவிட எரிபொருள் நிலையங்களில் அதனைப் பெற்றுக் கொள்ளும்போதுதான் தரமான எரிபொருட்களை ,நியாயமான விலையில் பயனாளிகள் பெற்று நன்மை அடையும் வாய்ப்புக்கள் உள்ளன.

இலங்கையில் பெற்றோலியக்கூட்டுத்தாபனத்துடன் தொடர்புடைய நிரப்பு நிலையங்கள் அல்லது ஐ:ஓ.சி .நிறுவனத்துடன் தொடர்புடைய நிரப்பு நிலையங்கள் விரைவில் இப்பிரதேசத்தில் உருவாக்கப்படவேண்டும்.என  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.



கே.சி.எம்.அஸ்ஹர்)


எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்படவேண்டும் Reviewed by Admin on July 13, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.