டெங்கு ஒழிப்பு வாரத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு(படங்கள்)
இக்கூட்டத்தல் கலந்தாலோசிக்கபட்ட விடயங்கள் பின்வருமாறு
ஆர் டி எச்; எஸ் மன்னார் - மன்னாரில் டெங்கு நிலமை சம்பந்தமான இற்றைப்படுத்துகை
டெங்கினை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சவால்களும் பிரச்சனைகளும்
பொலீசாரினால் டெங்கு கட்டுப்பாடு தொடர்பான அறிக்கையும் காட்சிப்படுத்துகையும்
டெங்கு வாரத்திற்கான செயற்பாட்டு நடவடிக்கை திட்டமிடல்
கடந்த வருடத்தில் மன்னாரில் 186 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியிருந்தனர். ஆனால் முறையான தடுப்பு வழிகளை பின்பற்றிமையினால் இவ்வருடம் 55ஆக குறைவடைந்துள்ளது என்றும்
பின்வரும் இடங்கள் டெங்கு அதிகளவில் காணப்படும் இடங்களாக இனங்காணப்பட்டுள்ளமையினை சுட்டிக்காட்டினார்
மன்னார் நகரம்
செல்வநகர்
தோட்டக்காடு மற்றும்
பேசாலை
சங்கத்தின் தலைவர் ஜே.ஜே கெனடி அவர்கள் கூட்டத்தில் பங்குபற்றியிருந்தமையுடன் சங்கம் இதற்கான உதவிகளை மேற்கொள்ள நடவக்கை எடுக்குமென உறுதியளித்ததன் பிரகாரம் இதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் தத்தமது பிரதேசங்களில் இருந்து இதற்கான ஒத்துழைப்பினையும் விழிப்புணர்வினையும் சுகாதார அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள் மற்றும் பொலீசாருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.
இதில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரிவுத் தலைவர் திரு. சீலன் மாஸ்டர் அவர்கள் பேசாலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வினை சிறப்பாக நடைபெற ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மேலதிகமாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நானாட்டான் பிரதேசபையுடனும் வேல்ட்விஷன் லங்கா நிறுவனத்துடனும் கூட்டாக இணைந்து கடந்த மாதம் ஜூன் 28ம் தகதி டெங்கு விழிப்புணர்வு மற்றும் குப்பபையகற்றல் சுத்தீகரிப்பு நடைபெற்றது. இதில் நானாட்டன் குப்பபைவண்டிகள் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டதோடு மக்கள் முழு ஒத்துழைப்பினையும் நல்கினர் .
டெங்கு ஒழிப்பு வாரத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் பங்களிப்பு(படங்கள்)
Reviewed by Admin
on
July 13, 2013
Rating:
No comments:
Post a Comment