புகையிலை பாவனை தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை
இது தொடர்பில் மேலும் வெளியிட்ட தகவல்களின் படி....
உலக சுகாதார அமைப்பின் விசேட பிரதிநிதிகள் இருவருக்கும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித ம ஹிபாலவிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது.
இதன்போது, இன்றைய நிலையில், புகையிலை பொருள் பாவனை காரணமாக இலங்கையில் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் வரையில் இறக்கின்றனர்.
இது மட்டும் இல்லாமல் அதே எண்ணிக்கையானவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காவதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.எனவே தான் புகையிலை பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விரைவான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
புகையிலை பாவனை தொடர்பில் இலங்கைக்கு எச்சரிக்கை
Reviewed by Admin
on
July 28, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment