அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கடலுக்குச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை

மன்னாரில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் திரும்பி வரவில்லையென தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 மன்னார், பேசாலையிலிருந்து நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரே இவ்வாறு திரும்பி வரவில்லையெனவும் பொலிஸார் கூறினர்.

 பேசாலையை சேர்ந்த டியூரன் அப்புகாமி (வயது 38), கமால்டீன் சமீன் (வயது 26) ஆகியோரே கடற்றொழிலுக்காக படகில் சென்றிருந்தனர்.

இவர்களே திரும்பிவரவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் இம்மீனவர்களின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்

 இவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை கடற்படையுடன் இணைந்து தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


மன்னாரில் கடலுக்குச் சென்ற இரு மீனவர்களை காணவில்லை Reviewed by Admin on July 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.