மன்னார் பாடசாலையில் மதிய உணவு வழங்குதலில் முறைக்கேடு
உலக உணவுத்திட்டத்தினூடாக பாடசாலை மாணவர்களுக்கான சமைத்த மதிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.மதிய உணவு தயாரிப்பதற்கான சகல பொருட்களையும் உலக உணவுத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தாழ்வுபாடு கிராமத்தில் உள்ள குறித்த பாடசாலையில் மதிய உணவை அப்பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் பெற்றோர்கள் முழு சம்மதத்துடன் சமைத்துக்கொடுத்து வருகின்றனர்.
ஆனால் தற்போது மதிய உணவு சமைப்பதற்காக வழங்கப்படுகின்ற பொருட்களில் பாரிய மோசடிகள் இடம் பெற்று வருவதாக அந்த பெற்றோர் விசனம் தெரிவித்துள்ளனர்.
ஒரு உணவை தயாரிப்பதற்கு தேவையான சகல பொருட்களும் அங்கு இருக்கின்ற போதும் அவை தரப்படுவதில்லை இல்லை எனவும் இதனால் குறித்த மாணவர்களுக்கு தரமான உணவை சமைத்துக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த உணவுப் பொருட்களுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் குறித்த பொருட்களை பாடசாலையை விட்டு வெளியில் கொண்டு சென்று விற்பனை செய்து வருவதாகவும் அந்த பெற்றோர் விசனம் தெரிவித்தள்ளனர்.
குறிப்பாக உப்பு பக்கட்,தேங்காய் எண்ணை,மீன் டின், சோய மீற், உருளைக்கிழங்கு உற்பட பல வித பொருட்கள் வெளியில் கொண்டு செல்லப்படுகின்றது.
இதனால் மாணவர்களுக்கு உரிய முறையில் மதிய உணவை சமைத்துக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் பாடசாலையில் மதிய உணவு வழங்குதலில் முறைக்கேடு
Reviewed by Admin
on
July 13, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment