நானாட்டான் பிரதேச செயலகத்தில் மாணவர்களுக்கான பொது அறிவு வினாடி வினாப் போட்டி(படங்கள் )
இது தொடர்பாக நானாட்டன் பிரதேச செயலகத்தின் நிர்வாக அலுவலகர் எஸ்.சூசைநாயகம் றெவல் தெரிவிக்கையில்,,,,,
மாணவர்களை நல் குறிக்கோளுடன் ஒழுக்கமும், அறிவுத்திறனும் மிக்கவர்களாய் ஆக்கவேண்டிய பொறுப்பு பாடசாலை சமூகத்திற்கு மேலாக பெற்றோர், நலன் விரும்பிகள், சமூக ஆய்வாளர்கள் மற்றும் பிரதேச மட்ட நிறுவனங்கள், அமைப்புகளும் செயற்பட வேண்டிய தேவை இன்று மிகவும் உணரப்பட்டுள்ளது.
விரைந்து செல்லும் விஞ்ஞான தொழில்நுட்ப யுகத்தில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் பொது விடயங்கள் தொடர்பான அறிவு மிகுந்த செல்வாக்கு செலுத்துவதை மறுக்க முடியாது.
மாணவர்களின் பல்கழைக்கழக அனுமதி மற்றும் பல்வேறு பட்ட தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கும், வகிக்கின்ற பதவிகளில் உயர்வு பெறுதல் மற்றும் தடை தாண்டல் பரீட்சைகள், தேசிய ரீதியான பொதுப் பரீட்சைகளில் வெற்றி பெற்றுக் கொள்வதற்கும் பொது அறிவு தொடர்பான விடயங்கள் மிக மிக அவசியமாக தேவைப்படுகின்றது.
எனவே தான் எமது செயலகம் தனது செயற்பரப்பெல்லைக்கு அப்பால் இவ்வாறான புதிய முயற்சிகளில் இறங்கியது.
பிரதேச செயலாளர் திரு.க.அ.சந்திரஐயா அவர்களின் திட்மிடலில் அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மன்னார் வேல்ட் விசன்,சேவலங்கா,ஒபர் ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் மேற்படி போட்டியை நடாத்தினோம்.
இதன் போது முதலாம் இடத்ததை மன்/புனித ஆனாள் ம.ம.வி, வங்காலை,இரண்டம் இடத்தை மன்/நானாட்டான் மவி ,மூன்றம் இடத்தை மன்/இலகடிப்பிட்டி றோ.க.த.க.பாடசாலை ஆகிய பாடசாலைகள் பெற்றுக் கொண்டன.
போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், வெற்றி பெற்ற பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகவும் பிரதம மத்தியஸ்தராகவும் முருங்கன் டொண் பொஸ்கோ இல்ல அருட்தந்தை மெல்வின் அடிகளார் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலகம் மாணவர்களின் கல்வி செயற்பாட்டு பரப்பெல்லைக்குள் இவ்வாறான புதிய முயற்சியில் இறங்கி செயற்படுவது பாராட்டிற்குரியது என தனது ஆசியுரையில் தெரிவித்தார்கள்.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் அனுமதியுடன் இடம் பெற்ற இந்நிகழ்வு சகல பாடசாலை முதல்வர்கள்;ஆசிரியர்கள், மாணவர்களின் பூரண ஒத்துழைப்புடன் சிறப்பாக இடம் பெற்றதாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் நிர்வாக அலுவலகர் எஸ்.சூசைநாயகம் றெவல் மேலும் தெரிவித்தார்.
நானாட்டான் பிரதேச செயலகத்தில் மாணவர்களுக்கான பொது அறிவு வினாடி வினாப் போட்டி(படங்கள் )
Reviewed by Admin
on
July 12, 2013
Rating:
No comments:
Post a Comment