நாயாறில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான மீன்பிடி
கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினால் தொடர்ச்சியாகத் திடீர் பரிசோதனைகள் நாயாற்றுக் கடல்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்றபோதும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாயாற்றுக் கடல் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு, முல்லைத்தீவுக் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இதன்போது புல்மோட்டை மற்றும் கொக்கிளாயைச் சேர்ந்த மீனவர்கள் 3 பேர் அழுக்கு வலை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து வலைகள், படகுகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டதுடன் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அவர்கள் முற்படுத்தப்பட்டனர். இதன்போது 3 மீனவர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கை 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார் நீதிவான். இதேவேளை இந்தவார ஆரம்பத்திலும் சுருக்குவலை பயன்படுத்தி நாயாற்றுக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாயாறில் தொடர்ச்சியாக சட்டவிரோதமான மீன்பிடி
Reviewed by Admin
on
July 14, 2013
Rating:

No comments:
Post a Comment