வட பகுதி இரும்பு வியாபாரிகள் பாதிப்பு.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வடமாகாணத்தில் பலர் பழைய இரும்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். குறிப்பாக பழைய இரும்புகளைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்றவர்கள் இந்த இரும்புகளைச் சந்தைப்படுத்த முடியாத நிலையில் இரும்பு வியாபாரம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
குறிப்பாக தென்பகுதியிலுள்ள இரும்பு கொள்வனவு செய்கின்ற நிறுவனங்கள் இரும்பினை சர்வதேச நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருவதால் வடபகுதி இரும்பு வியாபாரிகள் பழைய இரும்புகளைச் சந்தைப்படுத்த முடியாத நிலை தோண்றியுள்ளது.
இதனால் வடபகுதியில் இரும்பு வியாபாரிகள் இத்தொழிலை கைவிடுகின்ற நிலை தோண்றியுள்ளது. இதனால் வடக்கில் இத்தொழிலை நம்பி இருக்கின்ற சுமார் 500 குடும்பங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது
வட பகுதி இரும்பு வியாபாரிகள் பாதிப்பு.
Reviewed by Admin
on
August 25, 2013
Rating:

No comments:
Post a Comment