அண்மைய செய்திகள்

recent
-

மடுத்திருத்தலத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் போலி நாணயத்தள்கள் மாற்றல்.

மடுத்திருத்தலத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்று வியாழக்கிழமை(15-08-2013) போலி ஆயிரம் ரூபாய் தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாக பாதீக்கப்பட்ட கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மடுத்திருத்தலத்தின் ஆவணி மாதத்திருவிழா நேற்று வியாழக்கிழமை வெகு விமர்சையாக இடம் பெற்றது. இதன் போது பக்தர்களின் நலன் கருதி சகல தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகைகயில் சுமார் 300 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மடுத்திருத்தலத்திற்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மடுத்திருத்தலத்தில் உள்ள பல வர்த்தக நிலையங்களில் ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் மாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதிகமான மக்கள் நெரிசலின் மத்தியில் குறித்த போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் வர்த்தக நிலையங்களில் கொடுக்கப்பட்டு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டதோடு மிகுதி பணங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரங்களுக்கு பின்பே பணம் பரிசோதித்து பார்க்கப்பட்ட போது அவை போலி நாணயத்தாள்கள் என தெரிய வந்துள்ளதாக குறித்த வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மடுத்திருத்தலத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் போலி நாணயத்தள்கள் மாற்றல். Reviewed by Admin on August 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.