அண்மைய செய்திகள்

recent
-

திரையரங்குகளின் சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டம்

இலங்கையில் திரையரங்குகளில் அமைக்கப்பட்டுள்ள பெட்டி ஆசனங்களில் தமது காதலர்களுடன் இளம் வயது யுவதிகள் (16 வயதுக்குட்டவர்கள்) வருவதால், அதனை தடுக்க புதிய சட்டங்களை கொண்டு வர சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பொலிஸ் பணியகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை என்பன நடவடிக்கை எடுத்து வருகின்றன.

 பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரச் சபை என்பன இந்த விடயம் தொடர்பில் கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டு வருகின்றன.

 கம்பளை திரையரங்கொன்றில் இளம் யுவதி, காதலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை கருத்தில் கொண்டு இரண்டு தரப்பும் இந்த புதிய சட்டத்தை கொண்டு வருவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் தொடர்பான பொலிஸ் பணியகத்தின் பணிப்பாளர் ஜயந்த விக்ரமசிங்க தெரிவித்தார்.

 தற்போது திரையரங்குகளில் உள்ள பெட்டி ஆசனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.


திரையரங்குகளின் சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டம் Reviewed by Admin on August 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.