அண்மைய செய்திகள்

recent
-

பொன்ரேறா நிறுவனத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம்

அங்கர் பால் மா உள்ளிட்ட பால் மா வகைகளை உற்பத்தி செய்யும் பொன்ரேறா நிறுவனத்தின் பியகம தொழிற்சாலையின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு பியகம தொழிற்சாலையின் பணிகள் மறு அறிவித்தல் வரையும் இடைநிறுத்தப்பட்டதாக நிறுவனத்தின் அதிகாரிகள் கடந்த 23 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தனர்.

 இந்த தொழிற்சாலையில் கடமையாற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் நால்வர் உட்பட 750 பேரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இந்த முடிவு எட்டப்பட்டதாக நிறுவனம் அன்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 சவப்பெட்டியை எடுத்துவந்து தொழிற்சாலைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துதல், விற்பனை முகர்வர்களை அச்சுறுத்தல் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நியூசிலாந்து நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த தொழிற்சாலை மறு அறிவித்தல் வரையும் மூடப்பட்டதாக அந்த அதிகாரிகள் அன்று தெரிவித்திருந்தனர்.


பொன்ரேறா நிறுவனத்தின் பணிகள் மீண்டும் ஆரம்பம் Reviewed by Admin on August 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.